அதிமுக செய்தி தொடர்பாளர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் சசிரேகா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக வின் சார்பில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் அதிமுக வின் செய்தி தொடர்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிரேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இரு நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து அதிமுகவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது