‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

athivarathar durga stalin - 2026

காஞ்சிபுரத்தில், அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அடையும் துயரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது #அத்திவரதர்_வைபவம். வெள்ளிக்கிழமை இன்று காலையே கூட்டம்தான். அடுத்த மூன்று நாட்களும் கூட்டம் அதிக இருக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. ஆகவே வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் காஞ்சி உள்ளூர் நிலவரத்தைத் தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள் என்று கூறுகின்றார்கள் உள்ளூர் அன்பர்கள்.

தாம்பரம் – படப்பை காஞ்சிபுரம் வழி பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலால் திண்டாடுகிறது. விஐபி பாஸ் கிடைக்கும் என்ற நம்பிகையில் இங்கு உள்ளூர்வாசிகளை நம்பி வரவேண்டாம் என்று கூறுகின்றார்கள் உள்ளூர்க்கார்கள். போலீஸார் கெடுபிடி அதிகம் என்பதால் உள்ளூர்க்காரர்களே திண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், கட்சிக்காரர்களும், குறிப்பாக திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் செல்வாக்கைக் காட்டவும், பயன்படுத்தியும், மாவட்ட ஆட்சியரகத்தை துவம்சம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலும் காஞ்சிபுரம் அதிகம் எதிரொலிக்கிறது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறால் நான்கு பக்தர்கள் உயிரிழப்பு..! – செய்தி
கலெக்டரே… திமுக ரவுடிகளின் குடும்பங்களுக்கு VVVVIP பாஸ் கொடுத்து புடுங்குறதெல்லாம் இருக்கட்டும், கொஞ்சம் சாதாரண மக்களையும் கவனத்தில் கொள்ளுங்கோ.. -சத்யா
– என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 4 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளது அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டமிடல் இல்லாததே காரணம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நி உதவி தரவேண்டும் -ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, அத்திவரதருடன் பக்தரை அர்ச்சகரும்… ரவுடிகளை திமுக.,வினரும் சேர்த்து வைக்கிறார்கள் என்று கூறுகின்றார்கள் பக்தர்கள். அத்தி வரதருக்கும் ரவுடிகள், திமுக.,வினருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பும் அவர்கள், ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர் என்று ஆட்சியர் பரபரப்பு தகவல் வெளியிட்டதைக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எவருமே டோனர் பாஸ் இல்லாமல் வந்ததாகக் கூறப் படுகிறது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது! ஆனால், டோனர் பாஸ் கூட் ஐல்லாமல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு இந்து அறநிலை துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே அளவிலான மரியாதையை ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வழங்கப் பட்டது கண்டு உள்ளம் குமுறுகின்றார்கள், வரிசையில் கால்கடுக்க நின்றவர்கள்.

varichiyur selvam1 - 2026இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்வது போன்ற வீடியோக்கள் எனது கவனத்திற்கும் வந்தது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, வரிச்சூர் செல்வத்தை திமுக பிரமுகர்கள் அழைத்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள், உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் விவிஐபி நுழைவு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

rasathiammal - 2026திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்திவரதரில் ஆர்வம் காட்டும் திமுக.,வினர் குறித்து பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்கின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா, கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் என குடும்பத்தினரே ஆவலுடன் வந்ததும், ரவுடி ஒருவரை திமுக பிரமுகர்கள் எந்தவித அனுமதி சீட்டும் இன்றி அழைத்து வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories