நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்துங்க…!

viyakanth premalatha - 2026

1952 ஆகஸ்ட் 25ல் பிறந்த நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு இன்று 67 வயது!

தேமுதிக., நிறுவன தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்த நாள் 25-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது, எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு நிதியாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார்.

மேலும், இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 1500 குடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மிஷின்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் பிறந்தநாள் விழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இது தொடரும்.

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடமல் மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி 40 ஆண்டுகளாக வரலாறு படைத்து வருகின்றார் கேப்டன்

சினிமாக் காலம் முதல் தற்போது வரை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த முறை தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மெஷின்கள் வழங்கப்படுகிறது. அவை எங்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் எல்லா மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

Vijayakanth birthday celebration with school students - 2026

தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் தே.மு.தி.க. தொண்டர்களால் விரைவில் தூர் வாரப்படும். மரங்களை நடும் இயக்கத்தை நடத்தப் போகிறோம்.

ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் மழை நீரை சேமிக்க வேண்டும். தமிழகத்திற்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும். இனி வரும் காலம் தே.மு.க.வி-ற்கான காலமாக இருக்கும்.

திருப்பூரில் வரும் 15ஆம் தேதி தே.மு.தி.க. முப்பெரும் விழா கேப்டன் தலைமையில் நடைபெற உள்ளது! எதை இலக்காக கொண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீருவோம்.. என்று பேசினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியை தே.மு.தி.கவினர் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். எனவே, இந்த தினத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பேசுவார் என காத்திருந்தனர். ஆனால் அவர் அமர்ந்த நிலையில் இருந்தும் கூட பேசவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories