பிஎஸ்என்எல்., இணைப்புகள் முறைகேடு வழக்கு: கைதான மூவருக்கு மார்ச் 4 வரை காவல் நீட்டிப்பு

Published:

சென்னை: சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். அதிநவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கும் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், தொழில்நுட்ப அதிகாரி கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் வே.கெளதமன் ஆகியோர் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களது காவல் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த 3 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.கிருஷ்ணமூர்த்தி முன்பு, காவலில் இருந்த மூவரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img