ரூ.800 கோடி மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை ஏன்?போலீசார் தீவிர விசாரணை..

images 2023 02 22T110532.003 1 - 2026

ரூ.800 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஹிஜாவுநிறுவன நிர்வாகிகளில் ஒருவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதலி தெருவைச் சேர்ந்தவர் நேரு (47). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் செயல்பட்ட ஹிஜாவு நிறுவனத்தில் முகவராகஇருந்தார். இவரை நம்பி பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

நேருவும் நிறைய பேரைஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தார். ஆனால் அறிவித்தபடிஅந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பி வழங்கவில்லை.

இதில் பணத்தை இழந்த சுமார் 10 ஆயிரம் பேர், தங்களிடம் ரூ.800கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார்அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், முகவர்கள் என 6 பேரைஅடுத்தடுத்து கைது செய்தனர். அந்நிறுவன தலைவர் சவுந்திரராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் நேருவும் கடந்தநவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால்வழக்கு காரணமாக நேருவின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன வேதனை மற்றும் விரக்தியுடன் காணப்பட்ட நேரு, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு சென்று வந்தார். இதனால் மேலும் மன வேதனையடைந்த‌ அவர் வீட்டில் தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தண்டையார்பேட்டை போலீஸார் இவர் தற்கொலைக்கு முழு காரணம் என்ன என்பது குறித்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்

images 2023 02 22T110447.876 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories