தமிழர்களை எல்லாம் சாகடிச்சிட்டீங்க… இனிமே கொலையாளிகளை மன்னிச்சிட்டேங்கிறது வெத்து அரசியல்: ஜெயக்குமார் காட்டம்!

jayakumar - 2026

சென்னை:

ஈழத்தில் தமிழர்களை எல்லாம் சாகடித்துவிட்டு, இப்போது கொலையாளிகளை மன்னித்து விட்டேன் என்று சொல்வது வெற்று அரசியலுக்காகத்தான்… இப்படி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, “எங்கள் தந்தை கொலையால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம், காயப்பட்டோம். பல ஆண்டுகளாக கோபத்துடன் இருந்தோம். இருப்பினும எப்படியோ நாங்கள் கொலையாளிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம்” என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது. அவரது இந்தப் பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதில் கொடுத்துள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தபோது தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம். எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்… என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ராகுல் கூறுவதை கமல்ஹாசன் ஆதரிக்கிறாரே என்று கேட்டபோது, ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த திமுக.,வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது இதை நியாயப்படுத்துகிறாரா? என்று பதில் கேள்வி கேஎட்டார்.

தொடர்ந்து, அப்படியென்றால், ராகுல் இதில் அரசியல் செய்வதாகக் கருதுகிறீர்களா? என்று கேட்டபோது, அங்கே எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதைப் பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. வேறு எதற்காக என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பல மட்டங்களில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில், பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், “2 லட்சம் தமிழர்களைக் கொன்ற போது மௌனமாக இருந்தது ஏன்?” என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories