December 5, 2025, 11:25 PM
26.6 C
Chennai

நான் மட்டும் முதல்வரானால் … பிறகு நடிக்க மாட்டேன்! : ரசிகர்களுக்கு விஜய் தந்த ‘டிப்ஸ்’!

sarkar audio launch - 2025

சென்னை: நான் மட்டும் நிஜத்தில் முதல்வரானால் பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வௌியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இசையை ரசிகர்களே வெளியிட்டனர். இதற்காக ஒரு இணையதளம் துவக்கப்பட்டு, அதை ரசிகர்களே வௌியிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியபோது, நன்றி நண்பா, ரசிகர்களின் ஆரவுக்கு நன்றி. இந்த விழாவின் நாயகன் ரஹ்மான். ஆளப் போறான் தமிழன் பாடல், தமிழர்களின் அடையாளம். ஒரு விரல் புரட்சி ஒட்டுமொத்த மக்களின் அடையாளம். ரஹ்மான் இசையமைத்திருப்பது சர்காருக்கு ஆஸ்கர் கிடைத்த மாதிரி. அவருடன் விவேக் இணையும் போது இன்னும் மேஜிக் ஆகிவிடுகிறது.

நாங்கள் இணையும் படங்கள் வெற்றி படங்களாக அமைந்து விடுகின்றன. சர்காரில் என்ன ஸ்பெஷல் என்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியலில் மெர்சல் செய்திருக்கிறார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில், சாவித்ரி வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். பாராட்டுகள். வரலட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபுவின் வளர்ச்சியை பார்த்து வியந்தேன்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம், ஆனால், வெற்றி அடையக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம் உழைக்கிறது. வாழ்க்கை என்ற விளையாட்டை பார்த்து விளையாடுங்க. இந்த டயலாக் யார் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால் நான் பாலோ செய்கிறேன்.

உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னு இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்குமாம். உண்மைதான் இது என் வாழ்க்கையில் சரியாக பொருந்துகிறது. நீங்களும் அதை பின்தொடருங்கள்.

சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம். நான் படத்தை சொன்னேன். பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்.

சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. ஒருவேளை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். எப்போதுமே தர்மம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும்… என்றார் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories