அருண்கிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள தே.பா., சட்டத்தை நீக்கக் கோரி மனு!

covai collectorate petition - 2026

கோவையில் பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நீக்கக் கோரி மனு அளிக்கப் பட்டது.

கோவையில் பாரத் சேனா அமைப்பின் மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சபரிகிரிசன் தலைமையில், மாநிலச் செயலாளர் வாசு, மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரம் முத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர் மாப்பிள்ளை செந்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் குமரேசன், ஆகியோர் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.

பின்னர் அவர்கள் கூறியபோது… ஈவேரா., சிலைக்கு காவி சாயம் ஊற்றியதாக பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணன் என்பவர், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் இளம் வயதுடையவர்! இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த தேசிய பாதுகாப்பு சட்டம் என்பது, வெள்ளையர் காலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டம். ஒரு உதாரணத்திற்கு 2010 ஆம் ஆண்டு ஒரு அரசியல் கட்சி பிரமுகர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது, ஆனால் அதனை அன்றைய அரசு சில வாரங்களில் ரத்து செய்தது. இது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும் .

இந்திய தேசிய கொடியை எரித்தவனுக்கு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு இல்லை. ஆனால் நாத்திகம் பேசிய ஈவேரா, சிலைக்கு காவி சாயம் ஊற்றியவருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

ஈவேரா சிலை மீது காவி சாயம் ஊற்றத் தூண்டிய, தமிழ் கடவுள் முருகன் மீது பாடப்பட்ட கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசி பதிவிட்ட, கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாரத் சேனா நிர்வாகி அருண் கிருஷ்ணனுக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக நடக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்.

எனவே இவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories