December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!

santhi-geers-subramaniam
santhi-geers-subramaniam

கோவை சாந்தி கியர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன் மறைவு குறித்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்…

கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனர் மற்றும் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் ஐயா திருமிகு சுப்பிரமணியம் அவர்கள் காலமான செய்தி நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே அம்மா உணவகங்களுக்கு முன்மாதிரியாக முதல்முதலாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் உணவகத்தை நடத்தி வந்தார். பொதுமக்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஜன அவுஷதி திட்டம் மூலம் உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு மக்கள் பயன் பெறுவதற்கு அந்தத் திட்டம் வடிவமைத்து அமுல்படுத்துவதற்கு முன்பாகவே சாந்தி சோஷியல் சர்வீஸ் பார்மசி ஏற்படுத்தி அதோடுகூட மருத்துவ சோதனை கூடத்தையும் ஏற்படுத்தி மிக குறைந்த கட்டணத்தில் இந்த செயல்களை செய்து வந்தார்.

துளியும் விளம்பரத்தை விரும்பாத மனிதர் கோவை மாநகரில் கிராமப்பகுதிகளில் அரசு பள்ளிக்கூடங்கள் பலவற்றிற்கு கட்டிட வசதிகளையும் பல்வேறு விதமான கல்வி உதவிகளையும் செய்து கல்விச் சேவை செய்து வந்தவர்.

கோவை மாநகரில் முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை தீர்க்க குறைந்த விலையில், வருடம் முழுவதும் தினமும் மூன்று வேளை உணவு மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவைகள் அளித்து வந்த சாந்தி சோசியல் சர்வீஸ் மற்றும் சாந்தி கியர்ஸ் நிறுவனங்களின் சேர்மன் சுப்பிரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்

எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொழில்துறையில் மகத்தான சாதனைகள் செய்து, “சாந்தி கியர்ஸ்”என்ற இயந்திரங்களுக்கான கியர்ஸ் உற்பத்தி துறையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக தன்னுடைய நிறுவனத்தை உருவாக்கிய சாதனையாளர்.

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக படித்து, கடைபிடித்து எந்தவிதமான சுயவிளம்பரம் இன்றி ஏழை மக்களுக்கு, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணிப்போடு பல சேவைகள் செய்து உண்மையான சேவைப்பணியாற்றியவர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories