கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!

santhi-geers-subramaniam
santhi-geers-subramaniam

கோவை சாந்தி கியர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன் மறைவு குறித்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்…

கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனர் மற்றும் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் ஐயா திருமிகு சுப்பிரமணியம் அவர்கள் காலமான செய்தி நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே அம்மா உணவகங்களுக்கு முன்மாதிரியாக முதல்முதலாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் உணவகத்தை நடத்தி வந்தார். பொதுமக்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஜன அவுஷதி திட்டம் மூலம் உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு மக்கள் பயன் பெறுவதற்கு அந்தத் திட்டம் வடிவமைத்து அமுல்படுத்துவதற்கு முன்பாகவே சாந்தி சோஷியல் சர்வீஸ் பார்மசி ஏற்படுத்தி அதோடுகூட மருத்துவ சோதனை கூடத்தையும் ஏற்படுத்தி மிக குறைந்த கட்டணத்தில் இந்த செயல்களை செய்து வந்தார்.

துளியும் விளம்பரத்தை விரும்பாத மனிதர் கோவை மாநகரில் கிராமப்பகுதிகளில் அரசு பள்ளிக்கூடங்கள் பலவற்றிற்கு கட்டிட வசதிகளையும் பல்வேறு விதமான கல்வி உதவிகளையும் செய்து கல்விச் சேவை செய்து வந்தவர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

கோவை மாநகரில் முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை தீர்க்க குறைந்த விலையில், வருடம் முழுவதும் தினமும் மூன்று வேளை உணவு மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவைகள் அளித்து வந்த சாந்தி சோசியல் சர்வீஸ் மற்றும் சாந்தி கியர்ஸ் நிறுவனங்களின் சேர்மன் சுப்பிரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்

எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொழில்துறையில் மகத்தான சாதனைகள் செய்து, “சாந்தி கியர்ஸ்”என்ற இயந்திரங்களுக்கான கியர்ஸ் உற்பத்தி துறையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக தன்னுடைய நிறுவனத்தை உருவாக்கிய சாதனையாளர்.

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக படித்து, கடைபிடித்து எந்தவிதமான சுயவிளம்பரம் இன்றி ஏழை மக்களுக்கு, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணிப்போடு பல சேவைகள் செய்து உண்மையான சேவைப்பணியாற்றியவர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories