மண் சரிவால் ஊட்டி மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து

Published:

ஊட்டி:
மண் சரிவால், ஊட்டி மலை ரயில் இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப் பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அடர்லி-ல்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையேயும், கல்லாரிலும் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், சில இடங்களில் மரங்கள் விழுந்ததாலும் ஊட்டி நோக்கி சென்ற மலைரெயில் கல்லாரில் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் கார் மற்றும் வேன் மூலம் ஊட்டி சென்றனர்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர்-ஊட்டி இடையே ஓடும் பயணிகள் ரயிலும் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி ஏரிக்கு தண்ணீர் அதிகமாக வந்ததால் படகு இல்லத்தில் படகுத்துறை உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மூழ்கின. பாதுகாப்பு கருதி காலையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதியத்திற்கு பின்னர் மழை நீர் வடிந்ததால் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மிதி படகு, துடுப்பு படகுகளின் சவாரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img