ஜெனகை மாரியம்மன் தேர்! குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்!

janakai mariamman ther vizha - 2026

ஜெனகை மாரியம்மன் தேர்த் திருவிழாவில், பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நான்கு ரத வீதி வந்து கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்..

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு உத்தரவின் பேரில் மிகக் கட்டுப்பாடுடன் பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தேரில் பவனி வருவது போல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

janakai mariamman ther1 - 2026

செயல் அலுவலர் இளமதி, சண்முகவேல் பூசாரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். முக்கிய திருவிழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை மற்றும் தேங்காய் எடுத்து நான்கு ரத வீதியில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிக்கம்பத்தில் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.

சிலர் வெளியே இருந்தபடியே முடி காணிக்கை செலுத்தினர். ஆங்காங்கே ரோட்டில் இருந்தபடி பெண்கள் மாவிலக்கு எடுத்து தாங்களாவே அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்து அம்மனை நினைத்து வணங்கினார்கள்.

janakai mariamman ther - 2026

இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடக்காமல், இப்பகுதி உள்ள பக்தர்கள் கவலையுடன் காணப்பட்டனர். வந்திருந்த பக்தர்கள் அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories