December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

ஜெனகை மாரியம்மன் தேர்! குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்!

janakai mariamman ther vizha - 2025

ஜெனகை மாரியம்மன் தேர்த் திருவிழாவில், பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நான்கு ரத வீதி வந்து கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்..

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு உத்தரவின் பேரில் மிகக் கட்டுப்பாடுடன் பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தேரில் பவனி வருவது போல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

janakai mariamman ther1 - 2025

செயல் அலுவலர் இளமதி, சண்முகவேல் பூசாரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். முக்கிய திருவிழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை மற்றும் தேங்காய் எடுத்து நான்கு ரத வீதியில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிக்கம்பத்தில் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.

சிலர் வெளியே இருந்தபடியே முடி காணிக்கை செலுத்தினர். ஆங்காங்கே ரோட்டில் இருந்தபடி பெண்கள் மாவிலக்கு எடுத்து தாங்களாவே அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்து அம்மனை நினைத்து வணங்கினார்கள்.

janakai mariamman ther - 2025

இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடக்காமல், இப்பகுதி உள்ள பக்தர்கள் கவலையுடன் காணப்பட்டனர். வந்திருந்த பக்தர்கள் அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories