மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பறவைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மன்னார்வளைகுடா கடலோர பகுதிகளுக்கு உட்பட்ட முள்ளக்காடு, முயல் தீவு, ரோச் பூங்கா, பழையகாயல், மணப்பாடு, வேப்பலோடை, வேம்பார் உள்ளிட்ட இடங்களில் மும்பை இயற்கை மற்றும் வரலாற்று மைய விஞ்ஞானி பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மற்றும் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டனர்.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக நாரைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. மேலும் பொன்நிற உப்பு கொத்தி, வெண்மார்பு உப்பு கொத்தி, அரிவாள் மூக்கு உல்லான், சின்னமூக்கு உல்லான், பேதை உல்லான், மஞ்சள்கொத்தி உல்லான், ஆத்து மண்கொத்தி, பச்சைக்கான் உல்லான், சங்கு வளை நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பரவலாக காணப்படுகின்றன. இந்த பறவைகளின் எண்ணிக்கை தொடர்பான விவரம் கணக்கெடுப்பு முடிவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

images 19 2 - 2026
202201292354496732 Bird Survey in the Gulf of Mannar SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories