நெல்லை:
நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில் நாகர்கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஒரு வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்கள் 2 பேர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


