December 5, 2025, 1:52 PM
26.9 C
Chennai

முதல்வர் கனவில் நடிகர் விஜய்: புஷ்கர நீராடலில் பிரார்த்தித்த ‘கிறிஸ்துவர்’ எஸ்.ஏ.சந்திரசேகர்!

sddefault 15 - 2025

பாபநாசம்: நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு பாபநாசத்துக்கு இன்று காலை வந்திருந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசத்தில்
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நதியில் நடைபெறும் மகா புஷ்கர விழா, இந்த ஆண்டு தாமிரபரணி மகாபுஷ்கரமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் தாமிரபரணி நதியில் நீராடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசத்திற்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்…  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.  வழக்கறிஞர்கள் விவசாயிகள் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.

அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்; பயப்படுகின்றனர்.
பிறப்பால் நான் கிறிஸ்தவன். இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றி பல ஆண்டுகளாக ஆன்மீக ரீதியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்திருகிறேன்.

நடிகர் விஜய்யின் தந்தை என்பதை விடவும் நடிகர் என்பதை விடவும் ஒரு தமிழ் பிரஜையாக அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விருப்பப் படுகிறேன். என்னை ஆன்மீகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அண்மைக் காலமாக மக்களிடம் இந்து மத எழுச்சி ஏற்பட்டு வருகிறது. பலமுனைத் தாக்குதல்களால் சோர்வுற்ற பலரும் இப்போது இந்து மதத்தைப் பின்பற்றும் எங்களுக்கும் உரிமை உண்டு என்று எதிர்க்கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றனர். தனது திரைப்படங்களில் ஹிந்து மதத்தை இழிவு படுத்தி காட்சிகள் வைத்தும், பொது மேடைகளில் பேசியும், ஹிந்து மத விரோதத்தை சம்பாதித்துள்ளார் கிறிஸ்துவரான எஸ்.ஏ.சந்திரசேகர்.

மேலும், தன் மகன் விஜய் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்கு தனது இந்து மத எதிர்ப்புக் களன் தடையாக இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார். அதனால் இப்போது இயக்குனராக இருந்தவர் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் மட்டத்தில்.

சன் பிக்சர்ஸுடன் கைகோத்து விஜய் நகர்த்தும் அரசியல் நடவடிக்கையால், திமுக., தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. முதலில் மு.க.ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், தொடர்ந்து அவர் மகன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று காய் நகர்த்தி, சினிமா துறையில் இறக்கிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வரும் போது, நடிகர் விஜய்யின் அரசியலும், சன் குழுமத்தின் ஆதரவும், திமுக., தரப்புக்குள் குடும்ப மோதலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப் படுகிறது!

இத்தகைய சூழலில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், ஹிந்துக்கள் புனித சடங்காகப் போற்றி வரும் புஷ்கர நீராடலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories