தென்காசி கீழப்புலியூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

Published:

தென்காசி:
தென்காசி கீழப்புலியூரில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு தை பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஜன.16 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருக்குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆஸ்ரமம் தலைவர் சுவாமி அகிலானந்தா மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்.
விழா ஏற்பாடுகளை R.பாலசுப்பிரமணியன் K. முத்து கிருஷ்னன் M. ராஜா P. இசக்கி முத்து P.சுப்பிரமணியன் S. சுப்பையா மற்றும் தென்காசி நகர பாஜக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் சின்னையாடார்கட் துரை தேவனின் நண்பர்கள் மற்றும் தம்பிமார்கள் பாலகண்ணன் மணிகண்டன் தலைமையிலான வேதாளம் பாய்ஸ் நன்பர்கள் செய்திருந்தனர்.  தென்காசி நகர் மன்ற உறுப்பினர் பதவி மூலம் அமர்வு படியாக கிடைக்கப்பட்ட தொகை முழுவதையும் விளையாட்டு போட்டிக்காக செலவு செய்ததாக பாஜக., கவுன்சிலர் சாமி தெரிவித்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img