பாஜக., எம்எல்ஏ., உருவ பொம்மையை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸார் 20 பேர் மீது வழக்கு

Published:

நெல்லை :

பாஜ எம்எல்ஏவின் உருவ பொம்மையை நெல்லையில் தூக்கிலிட்ட காங்.,பொறுப்பாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பாஜக., எம்எல்ஏ., கைலாஷ் சௌத்ரியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் நெல்லை கொக்கிரகுளம் காங்., அலுவலகம் முன்பு நேற்று அவரது உருவ பொம்மையை தூக்கிலிட்டு கோஷம் போட்டனர். இதனையடுத்து அங்கு வந்த பாளை போலீசார் அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி மாநில பொதுச் செயலாளர் காமராஜ் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Related articles

Recent articles

spot_img