பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு

Published:

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் மஹ்மூத் ஹுசைனையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது சில ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களூம் கையெழுத்திட உள்ளதாகவும் பிரதமர் நவாஸ் ஷெரிப் அளிக்கும் மதிய விருந்தில் சிறிசேன பங்கேற்க உள்ளதகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நேற்று மதியம், கராச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைத்ரீபால சிறீசேனவை, சிந்து மாகாண முதல்வர் சையது காயிம் அலி ஷா வரவேற்றார்.

Related articles

Recent articles

spot_img