கவிதை – ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

Photo: எழுத அமர்ந்தால் வருவதில்லை!  எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்! வேறென்ன...? கவிதைதான்! உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம்,  மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம். கடலைச் சென்று சேராத நதியைப் போல் மனதைச் சென்று தொடாத கவியும் வீண்! நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்! மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்! பார்வை சரி... வார்த்தைகள் வேண்டுமே!  வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா? வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்!  காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு!  ஆம் ஆம்! கவி எழுதச் சொற்கள் அவசியமா?   கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்! எண்ணக் குதிரை பாய்ந்தோட...  எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்! ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்! ரசித்துப் படித்தேன்... ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்! ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்! ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!  மொழியின் முன் மண்டியிட்டு  வார்த்தை வரம் கேட்டேன் அரசியல் வாதிகள்  அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் கட்டுரையாளர்கள் சிலர்  கேட்டு வாங்கிப் போனார்கள் மீதமிருந்ததை பேசவும் ஏசவும்  மனைவியார் வாங்கிக் கொண்டார் தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என  மொழி மிகவும் வருத்தியது. வேறு வழியின்றி  வெற்றுக் காகிதத்தை மடித்து வழியில் என் காதலியிடம் தந்தேன். வாங்க மறுத்த அவள்...  “வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என  எனக்குத் தெரியும்” என்றாள். வார்த்தைகளே இல்லாத கவிதையை  வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது.... "கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!  - ஏர்வாடியாரின் இந்தக் கவிதை  ஏனோ எனை வாட்டிவிட்டது!  ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை  வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே!  உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை! 
எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!
வேறென்ன…?
கவிதைதான்!
உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், 
மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.
கடலைச் சென்று சேராத நதியைப் போல்
மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!
நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!
மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்!
பார்வை சரி… வார்த்தைகள் வேண்டுமே!
வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா?
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்!
காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு!
ஆம் ஆம்!
கவி எழுதச் சொற்கள் அவசியமா?
கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்!
எண்ணக் குதிரை பாய்ந்தோட…
எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்!
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்!
ரசித்துப் படித்தேன்…
ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்!
ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்!
ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!

மொழியின் முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல் வாதிகள்
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியார் வாங்கிக் கொண்டார்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என
மொழி மிகவும் வருத்தியது.
வேறு வழியின்றி
வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்…
“வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என
எனக்குத் தெரியும்” என்றாள்.
வார்த்தைகளே இல்லாத கவிதையை
வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது….
“கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!
– ஏர்வாடியாரின் இந்தக் கவிதை
ஏனோ எனை வாட்டிவிட்டது!
ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை
வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே!
உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!

ALSO READ:  "We are all one", this realization of oneness is attained in the Varg : Atul Limaye

(1) Senkottai Sriram

1 COMMENT

  1. அருமையான கவிதை.
    நன்றி செங்கோட்டை ஸ்ரீராம்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories