பாஜக.,வினரை பொறுக்கி என்ற ‘வாடகை வாயர்’ நாஞ்சில் சம்பத்; எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கேட்டு சமாளிப்பு!

Published:

bjp opposes nanjil sampat in a meeting - 2026

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் வாயை வாடகைக்கு விட்டு தொழில் செய்யும் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பாஜகவினரை அவதூறாக பேசியபோது, சபையில் இருந்த பொதுமக்களும், பாஜகவினரும் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

திராவிட சிந்தையில் வளர்ந்த வாடகை வாயர் நாஞ்சில் பல கட்சி மாறுவதில் வல்லவர். அந்த வகையில் தற்போது மீண்டும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசும்போது “பாரதிய ஜனதா கட்சியினர் பொறுக்கிகள்” என்று பேசியவுடன் அரங்கம் முழுவதும் இருந்த மக்கள் நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்று அந்த வார்த்தையை இதே சபையில் இப்போதே திரும்பப் பெற வேண்டும் என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த போது செய்வதறியாது அஞ்சி நடுங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சரண் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

இது பழைய பாஜக அல்ல என சமூக வலைதளத்தில் பாஜக தொண்டர்கள் நாஞ்சில் சம்பத் பம்மும் வீடியோவை பரப்பி வருகின்றனர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img