February 21, 2026, 5:49 PM
29 C
Chennai

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை; கேரளம் மாதூரில் தொடங்கி வைத்தார் எடியூரப்பா!

yediyurappa sabarimala yatra1 - 2026கேரளாவில் பாஜக., சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ரத யாத்திரையை கர்நாடக பாஜக., தலைவர் எடியூரப்பா வியாழன் இன்று மதியம் தொடங்கி வைத்தார்.

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யச் செல்லலாம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்துக்களின் மத நடைமுறைகளில் அதிகம் தலையிடுவதாகவும், குறிப்பிட்ட இந்து மத கேந்திரத்தின் பாரம்பரியப் பெருமையை அழிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்திருப்பதாகவும் கூறி, சபரிமலை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

yediyurappa sabarimala yatra2 - 2026

இதை அடுத்து, பாஜக., இந்து அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு, சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை ஒன்று நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி, கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது.

கேரளத்தின் வடக்கு மாவட்டமான காசர்கோடு மாவட்டம் மாதூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, தேஜ., கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வெல்லாப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடதுசாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும்! மக்களின் உணர்வுகளுக்கு பிணரயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

yediyurappa sabarimala yatra3 - 2026

இந்த ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories