April 23, 2025, 7:47 PM
30.9 C
Chennai

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

முஸ்லிம்களின் ஓட்டிற்காக தமிழர்களின் அடிப்படை உரிமையை மறுக்க துணை போகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று, இந்து முன்னணி எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி அநியாயம் செய்தது. இதன் மூலம் முறைகேடாக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசின் சொத்துக்களை, இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களை வக்ஃப் சொத்து என்று ஆக்கிரமிக்கும் போக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் மத்திய அரசு, வக்ஃப் வாரியம் திருத்த சட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்டு ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்ததால் மத்திய அரசு பாராளுமன்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டுக்குழு நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யவுள்ளது.
வக்ஃப் வாரிய சொத்து பிரச்சினை தமிழகத்தில் இல்லையா? அரசுக்கு அதைப்பற்றி தெரியாதா? பாதிக்கப்பட்டவர்கள் கதறல் காதில் விழவில்லையா?

ALSO READ:  மும்மொழிக் கொள்கை: திமுக., பழனிவேல் தியாகராஜனின் கேள்விகள் அபாரமா? அபத்தமா?

எவ்வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என குறிப்பிட்டு பல பேர்களின் தலையில் மன்ன அள்ளிப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது தமிழ்நாடு வக்ஃப் வாரியம்.

உதாரணமாக திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்பட சுமார் 375 ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரிய சொத்து என்று கூறியது. அங்குள்ள இந்துக்கள் தங்கள் சொத்துக்களை விற்பதற்கு வக்ஃப் வாரியத்திடம் தடையில்லாத சான்றிதழ் (NOC) வாங்கி வரும்படி பதிவாளர் கூறினார். அப்போதுதான் தமிழர்களுக்கு வக்ஃப் வாரியத்தின் முறைகேடாக சொத்து அபகரிப்பு பித்தலாட்டம் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி பகுதி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலசமுத்திரம், நெல்லை மாவட்டம் பழைய பேட்டை, ராணிப்பேட்டை வேப்பூர், சென்னை திருவல்லிக்கேணி என பல பகுதிகளில் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என்று எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடியது வக்ஃப் வாரியம்.

ALSO READ:  ஆண்களின் பிரத்யேக கோயில்: 10 ஆயிரம் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா!

மக்களின் எதிர்ப்பின் காரணமாக நயவஞ்சகமாக ஒரு சதியை தமிழக அரசு செய்தது. அது தற்காலிகமாக வக்ஃப் வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பத்திர பதிவை செய்ய மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை பயன்படுத்த வைத்தது.

தங்கள் சொத்துக்களை வக்ஃப் வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்பட அரசியல் கட்சிகள் துணைபோகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பணத்தை கொடுத்து சட்டப்படி வாங்கி பதிவு செய்த சொத்துக்களை கள்ளத்தனமாக வக்ஃப் வாரிய சொத்து என்று அபகரிப்பது குறித்து பாஜக தவிர மற்ற அரசியல் கட்சிகள் வாயை திறக்கவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக முதல்வர் கொண்டு வரும் மசோதா தமிழக மக்களுக்கு விரோதமானது.

மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மாநில அரசு கொண்டு வரும் மசோதாவின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.

ALSO READ:  பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

திருத்த மசோதாவை தமிழக மக்கள் பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமான நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories