February 20, 2026, 4:53 AM
25.4 C
Chennai

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

modi in meeting operation sindoor - 2026

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!

“மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.” -என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” “உறுதியளிக்கின்றோம்” என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.

இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.

இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல… மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.

  • செய்திக்கதிர் குழுவில் ஜி.எஸ். பாலமுருகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories