அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

modi in meeting operation sindoor - 2026

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இடைநிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இருந்ததாகவும், அதிபர் டிரம்ப் எப்படி முதலில் முடிவை அறிவிக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் சமாதானத்திற்கு, இந்தியா ஏன் ஒப்புக் கொண்டது என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ANI-க்கு அமெரிக்க வெளியுறவு துறை வழங்கிய கருத்துகளை வார்த்தை வார்த்தையாக வாசித்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது — இந்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டுகளுக்கு மட்டுமே.!

“மோடி, ஷெரீஃப் ஆகிய இரு பிரதமர்களின் ஞானம், அறிவு, மற்றும் அரசியல் முதிர்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்தது அவர்களின் திறமையின் சான்று. அதிபர் ட்ரம்பும், வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோவும், இரு நாடுகளும் முழுமையான சமாதான ஒப்பந்தத்தை நிலைநிறுத்தி நேரடி உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோதல்களை தவிர்க்க, பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்.” -என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் “பாராட்டுகிறோம்”, “ஆதரிக்கின்றோம்”, “வலியுறுத்துகின்றோம்” “உறுதியளிக்கின்றோம்” என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மத்தியஸ்தம், தலையீடு அல்லது உறுதி செய்தோம் போன்ற சொல்லாடல்கள் காணப்படவில்லை.

இது இந்தியாவின் நீண்டநாள் வெளிநடப்பு கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது — “எந்தத் தீர்வும், மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல், நேரடியாகவே தீர்க்கப்படும்” என்பது இந்தியாவின் வெளியுறவுத் துறையின் நிலைப்பாடு.

இந்த சமாதான வெற்றி, வெளிநாட்டுத் தூதுவர்களால் அல்ல… மோடியின் நேரடி உறுதி மற்றும் இந்தியாவின் உறுதியான கொள்கை என்பதால்தான் சாத்தியமானது.

  • செய்திக்கதிர் குழுவில் ஜி.எஸ். பாலமுருகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories