December 6, 2025, 2:12 AM
26 C
Chennai

அதிமுகவுக்கு என் உயிர் மூச்சு இருக்கும் வரை விசுவாசமாக இருப்பேன்: செங்கோட்டையன்

 

அதிமுகவுக்கு என் உயிர்மூச்சு இருக்கும்வரை விசுவாசமாக இருப்பேன் என்று செங்கோட்டையன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,

எவ்வித சலனத்துக்கும் உட்படாமல் என் வாழ்நாள்முழுவதும் அம்மாவுக்கும் இயக்கத்துக்கும் உண்மையான தொண்டனாகப் பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்தும் குழப்பத்தை உருவாக்க நினைத்தும் சில தீய சக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, மாண்புமிகு அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கத்துக்கு உறுதுணையாக என்றென்றும் என் உயிர்மூச்சு உள்ளவரை இருப்பேன்.
இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இயக்கமாக உருவாக்கிய மாண்புமிகு அம்மா அவர்களால் வெற்றிவாகை சூடிய இந்த இயக்கத்தை யாராலும் எவராலும் ஒரு இம்மி அளவு கூட அசைக்க இயலாது.

அன்றும் இன்றும் என்றும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் விசுவாசமாகப் பணியாற்றி வரும் அம்மாவின் உண்மை விசுவாசியான என்மீது இனி வீண் வதந்திகளையும் பொய் பிரசாரங்களையும் பத்திரிகைகளிலும் வலைதளங்களிலும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைனை தெரிவித்துக் கொள்கிறேன்…

என் மகன் திருமண நிகழ்வில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இமாமெ தலைமீது விழும் ஆபத்து ஏற்பட்டாலும் சலனம் சறுக்கல் வழுக்கல் இல்லாதவர் என குறிப்பிட்டதைப் போல கழகத்திற்கும் கொண்ட தலைமைக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசியாக அன்றும் இன்றும் என்றும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.

sengottaiyan statment - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories