அதிமுகவுக்கு என் உயிர்மூச்சு இருக்கும்வரை விசுவாசமாக இருப்பேன் என்று செங்கோட்டையன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
எவ்வித சலனத்துக்கும் உட்படாமல் என் வாழ்நாள்முழுவதும் அம்மாவுக்கும் இயக்கத்துக்கும் உண்மையான தொண்டனாகப் பணியாற்றி வரும் என்னைக் குறிவைத்தும் குழப்பத்தை உருவாக்க நினைத்தும் சில தீய சக்திகள் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, மாண்புமிகு அம்மா அவர்கள் கட்டிக்காத்த இந்த இயக்கத்துக்கு உறுதுணையாக என்றென்றும் என் உயிர்மூச்சு உள்ளவரை இருப்பேன்.
இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய இயக்கமாக உருவாக்கிய மாண்புமிகு அம்மா அவர்களால் வெற்றிவாகை சூடிய இந்த இயக்கத்தை யாராலும் எவராலும் ஒரு இம்மி அளவு கூட அசைக்க இயலாது.
அன்றும் இன்றும் என்றும் நான் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் தலைமைக்கும் விசுவாசமாகப் பணியாற்றி வரும் அம்மாவின் உண்மை விசுவாசியான என்மீது இனி வீண் வதந்திகளையும் பொய் பிரசாரங்களையும் பத்திரிகைகளிலும் வலைதளங்களிலும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைனை தெரிவித்துக் கொள்கிறேன்…
என் மகன் திருமண நிகழ்வில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இமாமெ தலைமீது விழும் ஆபத்து ஏற்பட்டாலும் சலனம் சறுக்கல் வழுக்கல் இல்லாதவர் என குறிப்பிட்டதைப் போல கழகத்திற்கும் கொண்ட தலைமைக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மை விசுவாசியாக அன்றும் இன்றும் என்றும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.