நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக, நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
முன்னதாக அவரது மரணத்துக்கு, அவரின் மேலதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விஷ்ணுப்ரியாவின் பெற்றோரும் தோழியும் கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இன்று இந்த விவகாரத்தைக் கையில் எடுத்ததால் இது பெரிதானது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


