‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த தயக்கமா?- விஜயகாந்த் கேள்வி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள், ஊன்று கோல்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை மீண்டும் நடைபெற தே.மு.தி.க. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். எந்த வகையிலும் போராடி அதனை நடத்தியே தீருவேன். நான் சட்டசபைக்கு வரவில்லை என குறை கூறுகின்றனர்.

சட்டசபையில் கலந்து கொள்ளும் கட்சிகள் கூட அங்கு வெளிநடப்புதான் செய்ய முடிகிறது. மக்கள் பிரச்சினைகள் பற்றி அங்கு விவாதிக்க முடியவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதுமானது என்று தமிழக அரசு கூறுகின்றது. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணையை தமிழகம் அறியும்.

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் பலரும் சி.பி.ஐ. விசாரணை கோருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதற்கு தயங்குவது ஏன்?. பெண் முதல்வரின் ஆட்சியில் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை கவலைக்குரியது மட்டும் அல்ல கண்டனத்திற்கு உரியது. நேர்மையான அதிகாரிகள் பாராட்டப்படுவதற்கு பதிலாக பழிவாங்கப்படுகிறார்கள்.

கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. நான் யாரோடு கூட்டணி என்பதை விட என்னோடு யார் கூட்டணி என்பது தான் தற்போதைய நிலை. தே.மு.தி.க.வின் வளர்ச்சியை பற்றி மற்ற கட்சிகள் கவலை கொள்கின்றன. இதுவே 2016ல் தே.மு.தி.க.வின் சிறப்பான நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories