சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Published:

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி (வயது 87) நேற்று நள்ளிரவில் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலையில் ரிஷிகேஷின் ஷீஷம்ஜாடியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு திரும்பினார். ஆனால், நள்ளிரவில் அவருக்கு மீணடும் உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்தார். அவரது மறைவு அவரது சீடர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரது ஆன்மா நித்திய சமாதானத்தை அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் அறிவு, ஆன்மீகம் மற்றும் சேவை அடங்கிய சக்திப் பெட்டகம்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, அங்கு சென்றடைந்ததும் டுவிட்டர் மூலம் தயானந்த சரஸ்வதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img