ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நாளை அடக்கம்

கோவை ஆனைகட்டியில் பிரசித்தி பெற்ற ஆர்ஷவித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்தி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1930–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தார்.. அவருக்கு வயது 85.

1962–ம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்றார். 1990–ம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை தொடங்கினார்.

மேலும் ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவில் உள்ள செய்லர்ஸ்பர்க் ஆகிய இடங்களிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தம் கற்றுக்கொடுத்தார்.

இங்கு பயின்ற 200–க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றர்.

ஏழை மாணவ– மாணவிகளுக்கு உதவ நாடு முழுவதும் 120 இடங்களில் ‘எய்ம் பார் சேவா’ என்ற பெயரில் இலவச விடுதிகளை தொடங்கி நடத்தி வந்தார்.

இவர் ஆன்மிக பணி மற்றும் சமுதாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பை பெற்றவராக விளங்கினார்.

கடந்த சில மாதங்களாக நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தயானந்த சரஸ்வதி சுவாமி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு 10.20 மணிக்கு மரணமடைந்தார். ஆசிரம நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலையும் ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமியின் உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் நடைபெறுகிறது. தனக்கு சமாதி அமைப்பதற்கான இடத்தை தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தேர்வு செய்து கொடுத்தார். அந்த இடத்திலேயே உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories