ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நாளை அடக்கம்

கோவை ஆனைகட்டியில் பிரசித்தி பெற்ற ஆர்ஷவித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்தி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1930–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தார்.. அவருக்கு வயது 85.

1962–ம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்றார். 1990–ம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை தொடங்கினார்.

மேலும் ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவில் உள்ள செய்லர்ஸ்பர்க் ஆகிய இடங்களிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தம் கற்றுக்கொடுத்தார்.

இங்கு பயின்ற 200–க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றர்.

ஏழை மாணவ– மாணவிகளுக்கு உதவ நாடு முழுவதும் 120 இடங்களில் ‘எய்ம் பார் சேவா’ என்ற பெயரில் இலவச விடுதிகளை தொடங்கி நடத்தி வந்தார்.

இவர் ஆன்மிக பணி மற்றும் சமுதாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பை பெற்றவராக விளங்கினார்.

கடந்த சில மாதங்களாக நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தயானந்த சரஸ்வதி சுவாமி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு 10.20 மணிக்கு மரணமடைந்தார். ஆசிரம நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலையும் ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமியின் உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் நடைபெறுகிறது. தனக்கு சமாதி அமைப்பதற்கான இடத்தை தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தேர்வு செய்து கொடுத்தார். அந்த இடத்திலேயே உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories