திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி மெயின் ரோட்டில் உள்ள நகை அடகு கடையில் இன்று 29-09-2015காலை 9:30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து, அங்கு பணியில் இருந்த 6 ஊழியர்களை கட்டிப்போட்டு விட்டு, கடையில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது. மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி.,சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
தங்க நகை அடகு கடையில் கொள்ளை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

