டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரி கைது.?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

உயர் அதிகாரி கொடுத்த தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி கூறி இருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் சென்று புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விஷ்ணுப்பிரியா தன்னுடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது உயர் அதிகாரி லைனில் வருவதாகவும், பிறகு தன்னுடன் பேசுவதாகவும் விஷ்ணுப்பிரியா கூறியதாக மகேஸ்வரி கூறி இருந்தார்.

இது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மகேஸ்வரி– விஷ்ணுப்பிரியா உரையாடல் தொடர்பான ஆடியோ விவரங்களை சி.பி. சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் விஷ்ணுபிரியாவின் செல்போன், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேப் ஆகியவை தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இன்று கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள விஷ்ணு பிரியா வீட்டிற்கு சென்று அவரது தந்தை ரவியிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாக ஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரி மிரட்டல் தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.இதற்கான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர். இதனால் அந்த அதிகாரி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories