எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது

Published:

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.

மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே நடவடிக்கையில் இறங்கியதாக கூறிய சிங், தனது புகாரை காவல்துறை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆவோன்லா தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான தரம்பால் சிங்கின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்ட 9 எருமை மாடுகள் கடந்த ஜூன் 22-ம் தேதி இரவில் திருட்டு போனது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடனை தேடி வந்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் மாடுகளைத் திருடிய அக்ரம் என்ற நபரை பரேலியின் சிராவுலி பகுதியில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த மாடுகளை இறைச்சி வெட்டும் கூடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளான். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img