காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியில் தாயும் பலி

திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது 18) என்ற மகள் இருந்தார்.

மீரா சமீபத்தில் பிளஸ்–2 முடித்தார். எனவே அவரது பெற்றோர் கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது மீராவுக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே காதல் இருந்தது. மீராவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மீராவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே மீராவை திருவண்ணாமலையில் உள்ள மீராவின் சித்தி மீனாட்சி வீட்டில் கொண்டு விட்டனர். அங்கு மீரா இருந்தார். சமீபத்தில் ஆரணியில் மீரா படித்த பள்ளியில் அவருக்கு விலையில்லா மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மீரா கலந்து கொண்டு மடிகணினி பெற்றார். அதை தனது பெற்றோரிடம் கொடுத்து விட்டு மீண்டும் தனது சித்தி வீட்டுக்கு மீரா சென்றார்.

சித்தி வீட்டில் இருந்த மீரா தனது காதலுக்கு சம்மதம் கிடைக்காததால் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீராவின் பெற்றோர் கதறி துடித்தபடி திருவண்ணாமலைக்கு சென்றனர். அங்கு மீராவின் உடலை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டனர். தற்கொலை செய்த மீராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து மீராவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீராவின் உடல் அவரது சொந்த ஊரான ரகுநாதபுரத்துக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அப்போது மீராவின் தாய் வள்ளியும் உடன் வந்தார். பின்னர் மீராவின் உடல் ஊர் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மகளின் உடலை பார்த்து பார்த்து வள்ளி அழுதபடி மிகவும் சோகத்தில் இருந்தார். இதனால் அவரது உடல் மிகவும் சோர்வடைந்தாக தெரிகிறது. இதனால் அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக அக்ராபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னரும் மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டபடி இருந்தார். திடீரென அவர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கு நின்ற உறவினர்களும், ஊர் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளியை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. ஒரே நேரத்தில் மனைவியையும், மகளையும் பறிகொடுத்த மதியழகன் அவர்களது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மகளின் பிணத்தின் அருகே தாயும் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மீரா, வள்ளி ஆகிய 2 பேரின் பிணத்தையும் அருகருகே வைத்து ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதுவரை மீராவை நினைத்து கண்ணீர் விட்ட உறவினர்கள் வள்ளியை நினைத்தும் கண்ணீர் விட்டு அழுதனர். மீரா, வள்ளி ஆகியோரின் இறுதி சடங்கு நடந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories