டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம் – வைகோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் கோண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். விஷ்ணுபிரியாவின் தாய்– தந்தையருக்கு ஆறுதல் கூறினார். விஷ்ணுபிரியா உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா ஒரு நேர்மையான அதிகாரி. என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வருகிறது. குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஏன் சஸ்பெண்டு செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் இடமாற்றமாவது செய்து இருக்கலாம்.

காவல்துறை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வசம் உள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு இறந்ததற்கு அனுதாபம் கூட அவர் தெரிவிக்காதது ஏன்? விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து தற்போது விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையில் உள்ள ஒரு பிரிவு என்பதால் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை அவர்கள் பாதுகாக்கத்தான் செய்வார்கள். எனவே தான் இந்த வழக்குக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம்.

அதேபோல் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரிக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. அப்படி இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என அவர் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories