காங். கூட்டணி அரசின் அழுத்தம் காரணமாகவே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா – ஜெகதீஷ் பகவதி

Published:

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அழுத்தமான கோரிக்கையை ஏற்றுத்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஜெகதீஷ் பகவதி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு தாங்கள் பொறுப்பல்ல, அமெரிக்க அரசின் முடிவு இது என்று அப்போதைய மத்திய அரசு கூறி வந்தது.

தற்போது பிரதமராக 2வது முறையாக அமெரிக்கா வந்துள்ளார் நரேந்திர மோடி. இந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 10 வருடமாக அவருக்கு அமெரிக்க விசா கிடைக்காமல் போனதற்குக் காரணம் முந்தைய அரசுதான் என்று பகவதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, அனைவருக்கும் இது தெரிந்ததுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வேண்டுகோளின் பேரிலேயே மோடிக்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்க அரசு. இது மோடிக்குமே கூட தெரியும். ஆனால் அதை அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவர் மிகவும் எதார்த்தமான மனிதர். பிராக்டிகலான மனிதர். மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவுக்கு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வலிக்காத மாதிரியே கண்டனம் தெரிவித்தது. சீரியஸான கண்டனமாக அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒப்புக்கு கண்டனம் தெரிவித்து நிறுத்திக் கொண்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்தது, அவ்வளவுதான் என்றார் பகவதி கூறியுள்ளார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img