இந்திய கொடியில் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக மோடி கையொப்பம் இட்டாரா?: கிளம்பும் புதிய சர்ச்சை

ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள வால்ட்ரோப் அஸ்டோரியா ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார், அவர்களுக்கு அந்த ஓட்டலில் விருந்தும் அளித்தார்.

இந்த விருந்தை அமெரிக்காவில் பிரபல இந்திய உணவு வகைகளை சமைப்பதில் கைதேர்ந்த கலைஞரான விகாஸ் கண்ணா என்ற இந்தியர் தயாரித்திருந்தார். விருந்தின்போது, விகாஸ் கண்ணாவை சந்தித்த பிரதமர் மோடி, அவரது சமையலின் ருசியை பாராட்டினார்.

மேலும், அமெரிக்க அதிபருக்கு பரிசளிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய கொடியில் கையொப்பமிட்ட மோடி, அதனை ஒபாமாவிடம் சேர்ப்பிக்கும்படி விகாஸ் கண்ணா மூலமாக தந்தனுப்பியுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வமற்ற செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தபோதும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக இந்திய நாட்டின் தேசிய கொடியில் பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு, அதனை ஒபாமாவின் மனைவியின் நன்மதிப்பை பெற்ற சமையற்கலைஞரிடம் ஒப்படைத்துள்ள செய்தி, சில ஊடகங்கள் வழியாக கசியத் தொடங்கியுள்ளன.

இந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் மேத்தா என்பவர், தேசிய கொடியை அவமதித்த குற்றத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.டுவிட்டர் மூலம் பரவிய செய்தி தற்போது சமூக ஊடகங்களில்
படுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Entertainment News

Popular Categories