தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!

tenkasi district - 2026

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள் அமைக்கப் பெற்றபோது, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு, வாஞ்சி மாவட்டம் அமைக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டது.

இந்நிலையில், தென்காசி தனி மாவட்டம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறை தரப்பில் இருந்து ஆட்சியருக்கு உத்தரவு அனுப்பப் பட்டது. இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரிக்காதே… பல்வேறு வகையிலும் மன ரீதியான வகையிலும் ரத்த உறவுகளாலும் பின்னி பிணைக்கப்பட்டு ஒரே வீடாக வாழ்ந்து வரும் எங்களை மாவட்டத்தின் பெயரில் பிரிக்க வேண்டாம் என்று குரல் கொடுத்து வருகின்றனர் சிலர்.

அதற்குக் காரணம், தற்போதைய நெல்லை மாவட்டத்தில் நெல்லையை அடுத்து தென்காசிதான் இரண்டாவது பெரிய ஊர். ஆனால், தென்காசியில் அதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மிகக் குறுகலான சாலைகள், பழைமையான ஊர்க் கட்டமைப்பு, இன்னமும் முழுமை பெறாத, பெரு வசதிகளற்ற அரசு மருத்துவமனை, தாமிரபரணி நதியின் உற்பத்தியும், நீர் ஆதாரப் பகுதிகளும் தென்காசி பகுதியையே சார்ந்திருக்கும் தன்மை, மாவட்டம் என்ற அளவுக்கு ஆவதற்கு குறைந்த அளவே உள்ள நிலப் பரப்பு என பல்வேறு காரணங்கள் அடுக்கப் படுகின்றன.

தென்காசி பகுதி நீர் வளமும் பாசனச் செழிப்பும் கொண்ட பகுதியாக மாறிவிடும் போது, நெல்லை மாவட்டத்தின் வருவாய் பெரும்பகுதி பாதிக்கப் படும் தன்மையும் கூட இத்தகைய எதிர்ப்புக்குக் காரணமாகத் திகழ்கிறது. தென்காசி பகுதியில் சில அமைப்புகள் தனிமாவட்டம் கோரும்போது, நெல்லை பகுதியினர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களின் போர்க்குரலை இவ்வாறு சிலர் எழுப்பி வருகின்றனர்….

மாவட்ட அளவில் மிகச் சிறந்த வகையில் தென்காசியில் இதுவரை அரசு மருத்துவமனை இல்லை,,.ஹைகிரவுண்டுக்கே இன்னும் படு சீரியஸான மருத்துவத்திற்கு கொண்டு செல்லும் நிலை….மேலும் தாமிரபரணி உற்பத்தி தென்காசி பகுதியை சார்ந்திருந்திருப்பதால் மாவட்டம் பிரிக்கப்பட்டால் நெல்லைக்கு தண்ணீர் கொடுப்பது குறைய வாய்ப்பு உள்ளது ..விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவர்,.. இது போன்ற பல்வேறு முறையில் இருநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து பிண்ணிக் கிடக்கின்றது……………..

இதனால்
தேவையில்லை தென்காசி மாவட்டம் …
நாங்கள் நெல்லை மண்ணின் மைந்தர்களாகவே இருக்கின்றோம்…
????

  • சூரிய பாண்டியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories