December 5, 2025, 9:38 PM
26.6 C
Chennai

தென்காசி தனி மாவட்டம் வேண்டாம்! நெல்லையே பெருமை! எழும்பும் போர்க் குரல்கள்!

tenkasi district - 2025

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசி தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று வெகுநாட்களாக சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நபர்கள் பேரிலான மாவட்டங்கள் அமைக்கப் பெற்றபோது, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு, வாஞ்சி மாவட்டம் அமைக்கப் பட வேண்டும் என்று குரல் எழுப்பப் பட்டது.

இந்நிலையில், தென்காசி தனி மாவட்டம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு வருவாய்த் துறை தரப்பில் இருந்து ஆட்சியருக்கு உத்தரவு அனுப்பப் பட்டது. இது குறித்த அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரிக்காதே… பல்வேறு வகையிலும் மன ரீதியான வகையிலும் ரத்த உறவுகளாலும் பின்னி பிணைக்கப்பட்டு ஒரே வீடாக வாழ்ந்து வரும் எங்களை மாவட்டத்தின் பெயரில் பிரிக்க வேண்டாம் என்று குரல் கொடுத்து வருகின்றனர் சிலர்.

அதற்குக் காரணம், தற்போதைய நெல்லை மாவட்டத்தில் நெல்லையை அடுத்து தென்காசிதான் இரண்டாவது பெரிய ஊர். ஆனால், தென்காசியில் அதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மிகக் குறுகலான சாலைகள், பழைமையான ஊர்க் கட்டமைப்பு, இன்னமும் முழுமை பெறாத, பெரு வசதிகளற்ற அரசு மருத்துவமனை, தாமிரபரணி நதியின் உற்பத்தியும், நீர் ஆதாரப் பகுதிகளும் தென்காசி பகுதியையே சார்ந்திருக்கும் தன்மை, மாவட்டம் என்ற அளவுக்கு ஆவதற்கு குறைந்த அளவே உள்ள நிலப் பரப்பு என பல்வேறு காரணங்கள் அடுக்கப் படுகின்றன.

தென்காசி பகுதி நீர் வளமும் பாசனச் செழிப்பும் கொண்ட பகுதியாக மாறிவிடும் போது, நெல்லை மாவட்டத்தின் வருவாய் பெரும்பகுதி பாதிக்கப் படும் தன்மையும் கூட இத்தகைய எதிர்ப்புக்குக் காரணமாகத் திகழ்கிறது. தென்காசி பகுதியில் சில அமைப்புகள் தனிமாவட்டம் கோரும்போது, நெல்லை பகுதியினர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்களின் போர்க்குரலை இவ்வாறு சிலர் எழுப்பி வருகின்றனர்….

மாவட்ட அளவில் மிகச் சிறந்த வகையில் தென்காசியில் இதுவரை அரசு மருத்துவமனை இல்லை,,.ஹைகிரவுண்டுக்கே இன்னும் படு சீரியஸான மருத்துவத்திற்கு கொண்டு செல்லும் நிலை….மேலும் தாமிரபரணி உற்பத்தி தென்காசி பகுதியை சார்ந்திருந்திருப்பதால் மாவட்டம் பிரிக்கப்பட்டால் நெல்லைக்கு தண்ணீர் கொடுப்பது குறைய வாய்ப்பு உள்ளது ..விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவர்,.. இது போன்ற பல்வேறு முறையில் இருநிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து பிண்ணிக் கிடக்கின்றது……………..

இதனால்
தேவையில்லை தென்காசி மாவட்டம் …
நாங்கள் நெல்லை மண்ணின் மைந்தர்களாகவே இருக்கின்றோம்…
????

  • சூரிய பாண்டியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories