என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!

sukisivam q - 2026

என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சாளர் சுகி சிவம், அத்திவரதர் வைபவத்தைக் குறித்து கேலி பேசினார். அடுத்துள்ள கோயில் பெருமாளுக்கு இல்லாத பவர் அத்திவரதருக்கு எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினார். அத்திவரதர் வைபவத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியிருந்தார்.

இது சமூக மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கண்டனங்கள் வலுத்தன. இந்துமுன்னணி அமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ, ஆடியோ பதிவுகளை வெளியிட்ட சுகி சிவம், தற்போது பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

suki sivam statement - 2026அதில் அவர் கூறியிருப்பதாவது…

கடந்த 40 ஆண்டுகளாக தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் நான் செய்துவரும் நற்பணியை நாடு நன்கு அறியும்.  சிவகாசியில் நான் பேசிய ஒரு மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் வெட்டி எடுக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்டு விட்டது.

உண்மையில் முழு பேச்சையும் கேட்டால் இந்து மதத்தின் கர்ம யோகம் ஞான யோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்து இருப்பது புரியவரும். என்றாலும் சொற்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயத்தின் காவல் பணியை வலியுடன் செய்யும் என்னையும் என் பேச்சுக்கு பெருமளவில் கூடும் இந்து சகோதரர்களையும் பிளவுபடுத்தி என்னை தனிமைப்படுத்தும் சதி வேலையை சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என அறிகிறேன். அதனால் காவல்துறை மற்றும் சட்ட உதவியுடன் சதி புரிபவர்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

என்றாலும் என் சொந்த சகோதரர்களாகிய இந்து நண்பர்களுடன் சண்டையிட எனக்கு சம்மதம் இல்லை. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

என்றும் போல் இந்து மதத்திற்கு தொடர்ந்து பணி செய்ய விழைகிறேன். சேர்ந்து பணி செய்ய இந்து நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் தங்கள் அன்புடன்

சுகிசிவம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories