என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!

sukisivam q - 2026

என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சாளர் சுகி சிவம், அத்திவரதர் வைபவத்தைக் குறித்து கேலி பேசினார். அடுத்துள்ள கோயில் பெருமாளுக்கு இல்லாத பவர் அத்திவரதருக்கு எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினார். அத்திவரதர் வைபவத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியிருந்தார்.

இது சமூக மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கண்டனங்கள் வலுத்தன. இந்துமுன்னணி அமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ, ஆடியோ பதிவுகளை வெளியிட்ட சுகி சிவம், தற்போது பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

suki sivam statement - 2026அதில் அவர் கூறியிருப்பதாவது…

கடந்த 40 ஆண்டுகளாக தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் நான் செய்துவரும் நற்பணியை நாடு நன்கு அறியும்.  சிவகாசியில் நான் பேசிய ஒரு மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் வெட்டி எடுக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்டு விட்டது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

உண்மையில் முழு பேச்சையும் கேட்டால் இந்து மதத்தின் கர்ம யோகம் ஞான யோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்து இருப்பது புரியவரும். என்றாலும் சொற்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயத்தின் காவல் பணியை வலியுடன் செய்யும் என்னையும் என் பேச்சுக்கு பெருமளவில் கூடும் இந்து சகோதரர்களையும் பிளவுபடுத்தி என்னை தனிமைப்படுத்தும் சதி வேலையை சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என அறிகிறேன். அதனால் காவல்துறை மற்றும் சட்ட உதவியுடன் சதி புரிபவர்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

என்றாலும் என் சொந்த சகோதரர்களாகிய இந்து நண்பர்களுடன் சண்டையிட எனக்கு சம்மதம் இல்லை. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

என்றும் போல் இந்து மதத்திற்கு தொடர்ந்து பணி செய்ய விழைகிறேன். சேர்ந்து பணி செய்ய இந்து நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் தங்கள் அன்புடன்

சுகிசிவம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

முன்னதாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories