February 22, 2026, 9:20 AM
26.1 C
Chennai

என்னை தனிமைப் படுத்த சதி; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன்: சுகி சிவம்!

sukisivam q - 2026

என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ள ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சாளர் சுகி சிவம், அத்திவரதர் வைபவத்தைக் குறித்து கேலி பேசினார். அடுத்துள்ள கோயில் பெருமாளுக்கு இல்லாத பவர் அத்திவரதருக்கு எப்படி வரும் என்று கேள்வி எழுப்பினார். அத்திவரதர் வைபவத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களையும் கிண்டல் செய்யும் விதமாகப் பேசியிருந்தார்.

இது சமூக மட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது கண்டனங்கள் வலுத்தன. இந்துமுன்னணி அமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ, ஆடியோ பதிவுகளை வெளியிட்ட சுகி சிவம், தற்போது பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

suki sivam statement - 2026அதில் அவர் கூறியிருப்பதாவது…

கடந்த 40 ஆண்டுகளாக தமிழுக்கும் இந்து சமயத்திற்கும் நான் செய்துவரும் நற்பணியை நாடு நன்கு அறியும்.  சிவகாசியில் நான் பேசிய ஒரு மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் வெட்டி எடுக்கப்பட்டு பரவலாக்கப்பட்டு பிரச்சனை ஆக்கப்பட்டு விட்டது.

உண்மையில் முழு பேச்சையும் கேட்டால் இந்து மதத்தின் கர்ம யோகம் ஞான யோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்து இருப்பது புரியவரும். என்றாலும் சொற்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமயத்தின் காவல் பணியை வலியுடன் செய்யும் என்னையும் என் பேச்சுக்கு பெருமளவில் கூடும் இந்து சகோதரர்களையும் பிளவுபடுத்தி என்னை தனிமைப்படுத்தும் சதி வேலையை சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என அறிகிறேன். அதனால் காவல்துறை மற்றும் சட்ட உதவியுடன் சதி புரிபவர்களை கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

என்றாலும் என் சொந்த சகோதரர்களாகிய இந்து நண்பர்களுடன் சண்டையிட எனக்கு சம்மதம் இல்லை. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்த சிலர் முயற்சிக்கிறார்கள்.

என்றும் போல் இந்து மதத்திற்கு தொடர்ந்து பணி செய்ய விழைகிறேன். சேர்ந்து பணி செய்ய இந்து நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் தங்கள் அன்புடன்

சுகிசிவம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories