அயோத்தியில் மசூதி கட்டுவது இயலாது: இந்துக்களிடம் கொடுங்கள்: ஜமீர் உத்தின் ஷா!

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க முஸ்லீம்கள் முன்வர வேண்டும். அதுதான் நிரந்தர அமைதிக்கு ஒரே வழி. இந்த விவகாரத்தில் கோர்ட் மூலமாக எந்தத் தீர்வையும் யாரும் எட்ட முடியாது என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உத்தின் ஷா கூறியுள்ளார்.

அமைதியை விரும்பும் இந்திய முஸ்லீம்கள் என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது இந்த யோசனையை அவர் முன்வைத்தார்.

ஷா பேசுகையில் அவுட் ஆப் கோர்ட் சமாதானம்தான் ஒரே வழி, சிறந்த வழி.. அது மட்டுமே அயோத்தி பிரச்சினையைத் தீர்க்க உதவும். கோர்ட் மூலமாக எந்த சாதகமான தீர்ப்பையும் யாருமே வாங்க முடியாது.

என்னைக் கேட்டால் பேசாமல் அயோத்தி நிலத்தை இந்துக்களிடமே முஸ்லீம்கள் ஒப்படைத்து விட்டால். நாட்டின் அமைதியை மனதில் கொண்டு இதைச் செய்ய முன்வரலாம். ஒரு வேளை முஸ்லீம்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும் கூட நிலத்தை இந்துக்களிடமே கொடுத்து விடலாம். இந்து சகோதரர்களிடம் இதைக் கொடுப்பதன் மூலம் நீடித்த அமைதிக்கு வழி வகுக்க முடியும்.

இந்தத் தீர்வைத் தவிர வேறு நல்ல தீர்வு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இதைச் செய்யாமல் போனால் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories