December 5, 2025, 5:32 AM
24.5 C
Chennai

தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல விளையாட்டு வீரர்!

virat koli - 2025

இன்று 31வது பிறந்தநாள் கொண்டாடும் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மான்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனது சமூக வலை தள பக்கங்களில்,தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் வகையிலும், நம்பிக்கையூட்டி கொள்ளும் வகையிலும், கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரும் வியந்து காணும் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான விராட் கோலி, 239 ஓடிஐ மேட்ச்களில் 11520 ரன்கள் அடித்து இரண்டாவது அதிகபட்ச ரன் பெற்றவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து 82 டெஸ்ட்மேட்ச்களில் 7066 அடித்து உலகளவில் 7ஆம் இடத்தில் உள்ளார்.

இதை தொடர்ந்து, தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் ரீதியில், தனது சமூக வளை தளங்களில் ஓர் கடிதம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் கோலி.

அந்த கடிதத்தில், அவர் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை கண்டு துவண்டு விழாமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும், தன்னை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.

koli - 2025

“இன்று பிறந்தநாள் காணும் சிக்குவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வருங்காலத்தை குறித்து நிச்சயமாக உன் மனதில் பல கேள்விகள் நிறைந்திருக்கும். ஆனால் அவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிட்டால், பின்னர் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். எத்தகைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், அவை அனைத்தையும் நாம் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எப்போதும் செயல்படு.

சில சமயங்களில் நமக்கு நெருக்கமான உறவுகள் நம்மை புரிந்து கொள்ளாமல் போகலாம். அத்தகைய நேரங்களில் அவர்களை வெறுப்பதை விடுத்து, ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள். அவர்களை விட இந்த உலகில் எவராலும் உன்னை நேசிக்க முடியாது.

அவர்களை நீ நேசிக்கிறாய், உனது வாழ்வில் அவர்களுக்கு நீ நிச்சயமாக முக்கியத்துவம் அளிக்கிறாய் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதில் தான் அன்பு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories