தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல விளையாட்டு வீரர்!

virat koli - 2026

இன்று 31வது பிறந்தநாள் கொண்டாடும் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மான்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி, தனது சமூக வலை தள பக்கங்களில்,தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் வகையிலும், நம்பிக்கையூட்டி கொள்ளும் வகையிலும், கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரும் வியந்து காணும் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான விராட் கோலி, 239 ஓடிஐ மேட்ச்களில் 11520 ரன்கள் அடித்து இரண்டாவது அதிகபட்ச ரன் பெற்றவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து 82 டெஸ்ட்மேட்ச்களில் 7066 அடித்து உலகளவில் 7ஆம் இடத்தில் உள்ளார்.

இதை தொடர்ந்து, தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொள்ளும் ரீதியில், தனது சமூக வளை தளங்களில் ஓர் கடிதம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் கோலி.

அந்த கடிதத்தில், அவர் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை கண்டு துவண்டு விழாமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும், தன்னை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.

koli - 2026

“இன்று பிறந்தநாள் காணும் சிக்குவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வருங்காலத்தை குறித்து நிச்சயமாக உன் மனதில் பல கேள்விகள் நிறைந்திருக்கும். ஆனால் அவை அனைத்திற்கும் பதில் கிடைத்துவிட்டால், பின்னர் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும். எத்தகைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், அவை அனைத்தையும் நாம் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எப்போதும் செயல்படு.

சில சமயங்களில் நமக்கு நெருக்கமான உறவுகள் நம்மை புரிந்து கொள்ளாமல் போகலாம். அத்தகைய நேரங்களில் அவர்களை வெறுப்பதை விடுத்து, ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள். அவர்களை விட இந்த உலகில் எவராலும் உன்னை நேசிக்க முடியாது.

அவர்களை நீ நேசிக்கிறாய், உனது வாழ்வில் அவர்களுக்கு நீ நிச்சயமாக முக்கியத்துவம் அளிக்கிறாய் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதில் தான் அன்பு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories