முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

Published:

kcr telangana - 2026

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! – என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி – கூறியுள்ளது.

ஜஸ்டிஸ் ஃபர் திசா பெயரில் ஹைதராபாத்தில் ஏபிவிபி மிகப்பெரிய ஊர்வலம் நடத்தியது. குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தெலங்காணா முதல்வர் மீது விமர்சனங்களை அள்ளிக் கொட்டினர். சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திசா கொலைக்கு எதிராக ஏபிவிபி ஹைதராபாத்தில் மிகப்பெரிய ராலி நடத்தியது. அதில் பெருமளவில் மாணவர்கள் பங்குகொண்டனர்.

abvp hyderabad protest - 2026

திங்களன்று டிசம்பர் 2 மதியம் இந்திரா பார்க் வரை ஊர்வலம் சென்றனர். தாமதிக்காமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். திசாவுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் நிற்காது என்று ஏபிவிபி தலைவர்கள் தெளிவாக எடுத்துக் கூறினார்.

கொலை சம்பவம் தொடர்பாக தெலங்காணா உள்துறை அமைச்சர் முகம்மது முகம்மது அலி கூறிய கருத்துக்கள் குறித்து ஆத்திரம் அடைந்தனர். தன் சகோதரிக்கு போன் செய்ததற்கு பதில் 100-க்கு போன்செய்து இருக்கவேண்டும் என்று அவர் கூறிய கருத்து வெட்கக்கேடு என்றனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பெற்றோர் புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் தம் எல்லைக்குள் வராது என்று கூறி விரட்டியதைக் கொண்டே போலீசார் எந்த அழகில் வேலை செய்கிறார்கள் என்பது புரிகிறது என்று விமர்சனம் செய்தனர்.

முதல்வர் கேசிஆர் மீது ஏபிவிபி தலைவர்கள் எரிந்து விழுந்தனர். சந்திரசேகர ஆசாத் போன்ற பெயரை வைத்துக் கொண்டுள்ள கேசிஆர் மக்களுக்கு நியாயம் செய்ய இயலாமல் இருக்கிறார். உடனே அவர் தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஏளனம் செய்தனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று உறுதியாகக் கூறினர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img