அதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்!

ramartemple1 - 2026

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பை அளித்த பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைநடைபெற்று, பிரதமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையயடுத்து, ராமர் கோவில் கட்டுமானம் முழுக்க முழுக்க மக்களின் நன்கொடைகள் மூலம் மட்டுமே இருக்க வேண்டும் எனத் திட்டமிட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, நன்கொடை திரட்டும் பணியை கடந்த மாதம் 15’ஆம் தேதி தொடங்கியது. அதே சமயம் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் அனைத்து மதத்தினரும் நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடை பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை ரூ 2,500 கோடியைத் தாண்டியுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த 45 நாட்களில் நடந்த இந்த நிதி வசூல் போதுமான அளவு இருப்பதால் நன்கொடை வசூல் இயக்கம் நிறைவடைந்ததாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

அதேசமயம் இனிமேல் நன்கொடை அனுப்ப விரும்புவர்கள் தீர்த்த ஷேத்திர அறக்கட்டகளையின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, அதிக நன்கொடை அளித்த மாநிலங்களின் பட்டியலை தொகையுடன் வெளியிட்டுள்ளது.

என்னதான் பெரியார் மண் என இங்குள்ள அரசியல் அமைப்புகள் மார்தட்டிக் கொண்டாலும், ஒவ்வொரு முறையும் ஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.

ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் வழங்கப்பட்ட நன்கொடைகளில் மிக அதிக அளவாக தமிழகம் 850 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்த படியாக கேரளா 130 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய மாநிலங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது தோராய மதிப்பீடு தான் எனக் கூறியுள்ள ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையான தணிக்கைகள் முடிந்த பிறகு, முழு தகவல்களும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories