
நிலத்தகராறில் , தங்கை கணவரை தீ வைத்து எரித்த மைத்துனன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கோயிலாசம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா.
இவருக்கு கருப்பாயி, சிலம்பாயி என 2 மனைவிகள் உள்ளனர்.
மூத்த மனைவி கருப்பாயிக்கு மணி என்ற மகனும், 2வது மனைவி சிலம்பாயிக்கு, முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
முத்துலட்சுமியை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனது சித்திக்கு கொடுத்த 4 ஏக்கர் நிலத்தை மணி, திருப்பிக்கேட்டதாகவும், நிலத்தில் இருந்து ஆண்டியப்பனை காலி செய்யுமாறும் கூறியதாக தெரிகிறது.
ஆனால் ஆண்டியப்பன் அதற்கு மறுத்துவிட்டதால்,
இதனால் ஆத்திரமடைந்த மணி அங்கிருந்த தகர ஷெட்டில் ஆண்டியப்பனை வெளிளில் வரவிடாமல் பூட்டிவைத்து ஆண்டியப்பன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஆண்டியப்பன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இகுதுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



