December 8, 2025, 5:58 PM
28.2 C
Chennai

தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்! முகமூடி, கையுறை விலையெல்லாம் எக்கச்சக்கத்தில்… எகிறுது!

face maskk - 2025

தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்: நம்பினால் நம்புங்கள் மெடிக்கல் ஷாப்களில் Face Maskம் Hand Wash ம் பெரிய டிமாண்ட். மிக அதிக விலை and கிடைக்கவும் இல்லையாம். ஒரு 70+மூதாட்டி, சுயமாக பணம் எண்ணக்கூடத் தெரியவில்லை. சர்வசாதாரணமாக ரூ10,000க்கு 37 Face Mask மட்டும் (@ 270)வாங்கறார்.

  • என்று டிவிட்டர் சமூகத் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்குக் காரணம், இப்போது மாஸ்க், ஹாண்ட் க்ளௌ விலை எல்லாம் மெடிக்கல் ஷாப்களில் எகிறிவிட்டதுதான்!
coronavirus - 2025

ஒரு காலத்தில் பண்டில் பண்டிலாக வாங்கி வெச்சிருந்தாலும் மாஸ்ட்க் எல்லாம் அவ்வளவாக போகாது. இப்போது ஏக கிராக்கி, டிமாண்டுக்கு ஏத்த மாதிரி சப்ளை இல்லை என்பதால் விலையும் எகிறிவிட்டது என்கின்றனர் கடைக்காரர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா என்றால் நிச்சயமாக இல்லை! கொரொனா குறித்த மக்களின் அச்சம்தான் காரணம்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்றும், கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டு வருவதால், அதை எண்ணி, அதிக அளவில் மாஸ்க், கையுறைகளை வாங்கி வருகின்றனர் பலர். இதனால், மாஸ்க் விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது. சாதாரணமாக 2ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மூன்று அடுக்கு கொண்ட மாஸ்க் விலை ரூபாய் 22க்கு விற்கப்படுகிறதாம். வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்ட N – 95 மாஸ்க் விலை 90 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அதிகரித்து விட்டதாம்.

தில்லியில் கொரோனாவால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலரும் முகத்துக்கு மாஸ்க் அணியத் தொடங்கியுள்ளனர். இதை அடுத்து, மாஸ்க் விலை அதிகரித்து வருகிறது.

mask - 2025

முன்னதாக, மத்திய அரசு இதனால்தான் முகமூடிகள், கையுறைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. சீனாவில் பெருமளவில் வைரஸ் தொற்று பரவிய நிலையில், இந்தியாவிலும் வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் இருந்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது.

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் என்பதாலும், வெயில் அதிகம் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லை என்ற நிலையிலும், சென்னையில் மக்கள் அச்சத்தின் காரணத்தால், அதிக அளவில் தாங்களும் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இதனால் மருந்தகங்களில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் நிறுவனங்களே தயாரித்து சப்ளை செய்து வந்த நிலையில் ஏகத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், முகமூடிகள், கையுறைகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு அரசின் மருந்தகங்களில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Topics

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

Entertainment News

Popular Categories