நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த டிவி நேற்று முதல் பிளிப் கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
நோக்கியா இரண்டாவது ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்கான டீசர் வெளியான நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக விற்பனை செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது.
இப்போது லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளதால் ஆன்லைனில் விற்பனையை தொடங்கியுள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்டிவியின் விலை 31,999 ரூபாய். ஏற்கனவே நோக்கியா 55 இன்ச் டிவியை 41,999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் இந்த டிவி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப் கார்ட் தளத்தில் பல ஆஃபர்களும் இந்த டிவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
500 முதல் 1500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அண்ட்ராய்ட் 9 பையில் இயங்கும் இந்த டிவியில் பிளே ஸ்டோர்,அமேசான் பிரைம், டிஸ்னி+, ஹாட் ஸ்டார் மற்றும் யூடியூப் வசதிகள் உள்ளன. இதில் 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.