உறவுக்கு வரமறுத்த கள்ளக்காதலி! தாயையும் 3 வயது மகளையும் உடலெல்லாம் கடித்து துன்புறுத்திய காமக்கொடூரன்!

Published:

kama pisasu

கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா.கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் 23 வயது பெண்ணுடன் சிங்க ராஜாவுக்கு உறவு ஏற்பட்டது. ஒரு வருடமாக இந்த கள்ளக்காதல் நடந்து வந்துள்ளது.

அந்த பெண்ணுக்கும் கல்யாணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் கணவரை பிரிந்தவர். இதனால் சிங்கராஜா, தன் குடும்பத்தைவிட்டு விட்டு, இந்த பெண்ணையே 2வதாக கல்யாணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கினார். ஒரு மாசமாக இவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண், தன்னுடைய வீட்டிலிருந்து அலறி துடித்தபடியே வெளியே ஓடிவந்தார். அவர் உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன. அவருடன் சேர்ந்து 3 வயது குழந்தையின் உடம்பிலும் ரத்தம் வழிந்தது. இதனால் பதறிய அக்கம்பக்கத்தினர் ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொன்னார்கள்.

kama pisasu
kama pisasu

போலீசாரும் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் பகீர் தகவல்கள் வெளியாகின. “அன்றைய தினம் சிங்கராஜா அந்த பெண்ணை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதனால் டென்ஷன் ஆகிவிட்ட சிங்கராஜா அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார். அவரது தலையை பிடித்து சுவற்றில் முட்டி மோத வைத்தார். இதில் மண்டை பிளந்து அந்த பெண்ணுக்கு ரத்தம் கொட்டியது.

அப்போதும் ஆத்திரம் தீராமல், அங்கிருந்த 3 வயது குழந்தையையும் மிக கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அந்த குழந்தையின் உடம்பெல்லாம் கடித்து கடித்து காயங்களை ஏற்படுத்தினார். குழந்தைக்கும் ரத்தம் வழிந்து கொட்டி உள்ளது, இதற்கு பிறகுதான் உயிரை கையில் பிடித்து கொண்டு, தாயும்-குழந்தையும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தது தெரியவந்தது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிங்கராஜாவை போக்சோவில் கைது செய்து ஜெயிலில் தள்ளினர்.. தேனி ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இந்த கொடூர சம்பவம் தேனியில் அதிர்ச்சியை தந்தபடியே உள்ளது

Related articles

Recent articles

spot_img