மருந்துக் கடைகளில் பாராசிடமால் கிடைப்பதில்லை! புகாருக்கு நீதிமன்றம் கேள்வி!

madurai-people
madurai-people
  • மதுரை மாவட்டத்தில் மருந்து கடைகளில் பாரசிட்டமால், காப் சிராப் கிடைப்பதில்லை
  • மருத்துவர் சீட்டு வேண்டுமாம்
  • மருந்து கடைக்காரர்கள் கைவிரிப்பு
  • நீதிமன்றம் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்ய வற்புறுத்தல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் பாரசிட்டமால், கால்பால் உள்ளிட்ட பாராசிடமால் வகை மருந்துகள் மற்றும் காப்சிராப் ஆகியவை மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து கடைக்காரர்கள் வழங்க தயங்குவதுடன், மாத்திரைகள் தற்போது இருப்பில்லை என கடந்த சில மாதங்களாகவே கூறி வருகின்றனர்.

madurai highcourt branch
madurai highcourt branch

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் பல இன்னமும் அடைக்கப் பட்டிருப்பதால், மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடவேண்டி உள்ளது.
கொரோனா பயம் உள்ளதால், மக்கள் பலர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் எப்போதும் போல, மருந்துக் கடைகளில் பாரசிட்டமால், கால்பால், டோலபர், காப் சிரப் விற்க அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் பலர் சித்தா மருந்தகங்களில் உள்ள துளசி, ஆடாதோடை, மற்றும் கடுக்காய் பொடி, அதிமதுரம் போன்ற மருந்துகளை வாங்கத் தொடங்கி யுள்ளனர். அலோபதியிலிருந்து மக்கள் பலர் சித்தா மற்றும் ஆயூர்வேதத்துக்கு மாற தொடங்கியுள்ளனர்.

அரசு, கடைகளில் பாராசிட்டமால், கால்பால் கிடைக்க துரித நடவடிக்கையை பொது மக்கள் எதிர்பார்கின்றனர்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று… பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என, தமிழக அரசு வாதிட்டது. அதற்கு பதில் அளித்த நீதிமன்றம் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரிய வழக்கில், அரசு பதிலளித்ததைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியது. ஆனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர்களின் கையொப்பமிட்டு, பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் மருத்துவரின் பரிதுரை இன்று கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர்களின் செல்போன் எண் பெற்றுக் கொண்டு அரசுக்குத் தெரிவித்த வேண்டும் என்று கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டிருந்தன.

இந்நிலையில், அவ்வாறெல்லாம் அரசு சொல்லவில்லை என்று தடாலடியாக தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது.

பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில், அரசு இவ்வாறு பதிலளித்ததை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories