தெலுங்கு உலக அழகியாக மகுடம் சூடிய விஜயவாடா பெண்!

Published:

telugu miss - 2026

தெலுங்கு உலக அழகியாக, விஸ்வசுந்தரியாக மகுடம் சூடினார் விஜயவாடா பெண்!

விஜயவாடாவைச் சேர்ந்த இளம்பெண் தெலுங்கு விஸ்வ சுந்தரியாக மகுடம் சூட்டியுள்ளார். டிகிரி படித்துக்கொண்டே மாடலாக புகழ் பெற வேண்டும் என்ற இலக்கோடு போட்டிபோட்டு மிகவும் சிறப்பான ஒரு கௌரவத்தைப் பெற்றுள்ளார். தெலுங்கு கல்சுரல் ஃபெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று வெற்றியாளராக நின்றுள்ளார்.

கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த பி.நாகதுர்கா குசுமசாயி கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார். நாட்டியம், நாடகம் போன்ற துறைகளிலும் பயிற்சி பெற்று வருகிறார்.

தெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா (TANA) மற்றும் பிற தெலுங்கு அமைப்புகள் சேர்ந்து ஆன்லைன் வேர்ல்டு தெலுங்கு கல்ச்சுரல் ஃபெஸ்ட் 2020 போட்டிகளை நடத்தியது. அதில் பங்குகொண்ட நாகதுர்கா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் இளம் பெண்கள் 600 பேர் பங்கு பெற்றனர். அனைத்து சுற்றுகளையும் முடித்து இறுதியில் நாகதுர்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் தெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா நடத்திய ஆன்லைன் வேர்ல்ட் தெலுகு கல்சரல் ஃபெஸ்ட் 2020 போட்டியில் வென்று தெலுங்கு விஸ்வ சுந்தரியாக மகுடம் சூடியுள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

போட்டியில் 600 பேரோடு போட்டியிட்டு முதல் பரிசை வென்றுள்ளது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெலுங்கு விஸ்வ சுந்தரியாக அரிதான கவுரவம் கிடைத்தது ஆனந்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img