கரூரில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

karur-transport-retired-men-protest
karur-transport-retired-men-protest

63 மாத மாத உயர்த்தப்படாத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்காவிட்டால் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் கரூரில் பேட்டியளித்தார்.

கரூரில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்… 3 மாதமாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியர் களுக்கான காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட வில்லை எனவும் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
karur-transport-retired-men-protest1
karur-transport-retired-men-protest1

ஆர்ப்பாட்டத்தின்போது ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை இதனால் ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் எனவே உடனடியாக இந்த அரசு 63 மாதமாக உயர்த்தப்படாமல் உள்ள அகவிலைபடியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சரை பலமுறை சந்தித்த போதும் அவர் நிதி நிலைமை சரியில்லை என்று கூறுகிறார்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதலாக மாதமொன்றுக்கு 27 கோடி ரூபாய் மட்டுமே செலவு ஏற்படும் எனவே உடனடியாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்

இது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் அடுத்த வாரம் ஓய்வூதியர்கள் சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories