December 6, 2025, 4:25 AM
24.9 C
Chennai

ஒரு குடியிருப்பில் 103 பேருக்கு தொற்று! அதிர்ச்சியில் பெங்களூரு!

corona-test
corona-test

பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 103 பேருக்கு கொரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால் தற்போது அங்கு ஒரே இடத்தில் மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படிக்கும் 40 மாணவிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டப்பட்டது. சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள எஸ்.என்.என் லேக் வியூ குடியிருப்பில் வசிக்கும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகரித்து உள்ளது. அந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் டேராடூனுக்கு பயணம் செய்வதற்கு முன்பு சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் அந்த குடியிருப்பில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்ததாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சின் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், இந்த குடியிருப்பில் 1,052 பேரை சோதனை செய்துள்ளோம். அதில் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 96 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அங்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வைரஸின் மாறுபாட்டைக் கண்டறிய மாதிரியை சோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories