13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription 1 - 2026

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ’13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவம் அமைப்பைச் சேர்ந்த தர், பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள உயரமான பாறையில் 10 அடி நீளத்தில் கல்வெட்டு உள்ளது.

இதன் எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டு ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

அந்த கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான வல்லப பாண்டியனின் ஆட்சி காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனாருக்கு, அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பழந் தேவதானமான ஆண்டார்ப்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும், மல்லப்பதென்னாயக்கரும், கோயில் தானத்தாரும் மற்றும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததை பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது.

ஆண்டாப்பட்டு என அழைக்கப்படும் கிராமத்தின் பெயர், முற்காலத்தில் ஆண்டார்ப்பட்டு என அழைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் மற்றும் சந்திரன், மேலும் திரு அண்ணாமலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவை இடம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை கோயில் வழிபாடு மற்றும் வளர்ச்சிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories