13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Inscription 1 - 2026

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ’13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவம் அமைப்பைச் சேர்ந்த தர், பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள உயரமான பாறையில் 10 அடி நீளத்தில் கல்வெட்டு உள்ளது.

இதன் எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டு ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

அந்த கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான வல்லப பாண்டியனின் ஆட்சி காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனாருக்கு, அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பழந் தேவதானமான ஆண்டார்ப்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும், மல்லப்பதென்னாயக்கரும், கோயில் தானத்தாரும் மற்றும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததை பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது.

ஆண்டாப்பட்டு என அழைக்கப்படும் கிராமத்தின் பெயர், முற்காலத்தில் ஆண்டார்ப்பட்டு என அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் மற்றும் சந்திரன், மேலும் திரு அண்ணாமலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவை இடம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை கோயில் வழிபாடு மற்றும் வளர்ச்சிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories