வைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

corona-virus-3
corona-virus-3

கொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,977 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உச்சபட்சமாக சென்னையில் 1,11,054 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

பத்தாயிரம் எண்ணிக்கையை கடந்த மாவட்டங்களாக செங்கல்பட்டு 18,735, திருவள்ளூர் 17,706, காஞ்சிபுரம் 12,470, மதுரை 12,195, விருதுநகர் 10,977 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் 9469, தேனி 8554, திருநெல்வேலி 6801, கன்னியாகுமரி 6746, திண்டுக்கல் 4204, ராமநாதபுரம் 3719, சிவகங்கை 3053 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு ,பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதுதான் காரணமாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் எடுக்கப்படும் மாதிரிகள் மதுரை, திருநெல்வேலி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மதுரை தனியார் பரிசோதனை மையங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது.

சோதனை முடிவுகள் அறிவிக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நபர்கள் இயல்பாக வெளியில் நடமாடுவதால், பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர்.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக் கூடங்களை அதிகப்படுத்தி, சோதனை முடிவுகளை விரைவு படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories